விமான நிலைய தாக்குதல் எதிரொலி:ஏமனின் தலைநகர் சனாவை தாக்கிய சவுதி

விமான நிலைய தாக்குதல் எதிரொலி:ஏமனின் தலைநகர் சனாவை தாக்கிய சவுதி
Updated on
1 min read

அபா விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்களை தொடுத்துள்ளன.

சவுதி அரேபியாவின் அசிர் மாகாணத்தில் உள்ள அபா விமான  நிலையத்தில் புதன்கிழமை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சவுதி அரசு இன்று (வியாழக்கிழமை) ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.

இதற்கிடையில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சர் அன்வர் கூறும்போது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிளவுப்பட்டு இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்க்கு எதிர்ப்பை மீறி  ஈரான் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது” என்று குற்றஞ்சாட்டினார்.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.

இதில் கடந்த சில மாதங்களாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதிக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in