Last Updated : 12 Jun, 2019 08:19 AM

 

Published : 12 Jun 2019 08:19 AM
Last Updated : 12 Jun 2019 08:19 AM

இலங்கையில் நிகழ்ந்த ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகள் குறித்து அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் விசாரணை அறிக்கை ஒப்படைப்பு

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர் பாக நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கையில் கடந்த ஏப்.21 அன்று ஈஸ்டர் பண்டிகையின்போது 3 தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இந்தியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த பயங்கரத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றனர்.

இலங்கையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய தீவிர வாதிகளுக்குத் தலைவராக ஜஹ்ரான் ஹாசிமின் செயல்பட்ட தாகவும், இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்றும் இலங்கை அரசு குற்றம்சாட்டி அந்த அமைப்புக்கு தடையும் விதித்தது. குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கையில் கடந்த ஏப்.24 முதல் அவசர காலச் சட்டமும் அமல்படுத்தப்பட்டது.

இந்த அவசர காலச் சட்டத்தின் மூலம் இலங்கை காவல்துறைக்கு மட்டுமே இருந்த பல அதிகாரங்கள் முப்படையினர் வசமாகின. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முப்படைகளின் சோதனைச் சாவடிகள் அமைக் கப்பட்டு, சோதனை நடவடிக்கை கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அவசர காலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு விசாரணை நிறைவு பெறும் வரை நீதிமன்றத்தால்கூட பிணை வழங்க முடியாத நிலையும் உள்ளது.

இந்தியா விடுத்த எச்சரிக்கை

முன்னதாக, ஐஎஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற அமைப்பினர் அல்லது ஐஎஸ் அமைப்பினர் இலங்கையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளாதாக இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அதிகாரிகளிடம் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இலங்கையில் உள்ள தேவால யங்களை குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டது. ஆனால், இந்த எச்சரிக்கைகளை கவனக்குறைவாக இலங்கை அதிகாரிகள் எடுத்துக்கொண்ட தால் ஈஸ்டர் பண்டிகையின்போது மிகப் பெரிய தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் பின்னணியில், அதிபர் மைத்ரிபால சிறிசேனாவினால் நியமிக்கப்பட்ட குழு தனது இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் மாலை சமர்ப்பித்தது.

3 பேர் கொண்ட குழு

ஈஸ்டர் தினத்தன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம் பவங்கள் தொடர்பாக விசாரிக்க இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவினால் ஏப்.22-ல் அந் நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொடவின் தலைமை யில் 3 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டது. இந்தக் குழுவால் 2 இடைக்கால அறிக்கைகள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x