Published : 25 Mar 2018 10:11 AM
Last Updated : 25 Mar 2018 10:11 AM
பகத் சிங் உள்ளிட்ட 3 சுதந்திரப் போராட்ட வீரர்களின் 87-வது நினைவு தினம் பாகிஸ்தானில் அனுசரிக்கப்பட்டது.
பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். மூவரும் இளம் வயதிலேயே 1931-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் லாகூரில் தூக்கிலிடப்பட்டனர். இந்த சம்பவம் சுதந்திரப் போராட்டத்தில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் ஈடுபட உந்துசக்தியாக விளங்கியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த மூவரையும் தேசிய ஹீரோக்களாக அறிவிக்க வேண்டும் என்று பகத் சிங் மெமோரியல் பவுண்டேஷன் (பிஎஸ்எம்எப்) மற்றும் தி பகத் சிங் பவுண்டேஷன் பாகிஸ்தான் ஆகிய 2 அமைப்புகளும் கோரி வருகின்றன. இந்த அமைப்புகள் சார்பில் பகத் சிங் உள்ளிட்ட மூவரின் 87-வது நினைவு தினம் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. இவர்கள் தூக்கிலிடப்பட்ட லாகூரின் ஷத்மான் சவுக் பகுதியில் மூவருக்கும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT