Last Updated : 30 Sep, 2014 12:27 PM

 

Published : 30 Sep 2014 12:27 PM
Last Updated : 30 Sep 2014 12:27 PM

ஒபாமாவுக்கு காந்தி பார்வையில் கீதை புத்தகத்தை பரிசாக வழங்கினார் மோடி

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போது, அவருக்கு 'காந்தியின் பார்வையில் கீதை' என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார்.

அமெரிக்கா சென்றுள்ள நரேந்திர மோடி, நியூயார்க்கில் ஐ.நா. பொதுச் சபை கூட்டம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு சென்றடைந்தார்.

அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ரசனையை நன்கு அறிந்த நரேந்திர மோடி, 'காந்தியின் பார்வையில் கீதை', ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் தொடர்பான குறிப்புகள் கொண்ட நூல்களை பரிசாக வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x