Published : 10 Mar 2018 10:53 AM
Last Updated : 10 Mar 2018 10:53 AM
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டு சண்டையிட்டு வருகிறது. இதன் விளைவாக, அல்-காய்தா அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டுள்ளன. எனினும், அங்கு தலிபான் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.32 கோடி சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா நேற்று அறிவித்தது.
இதுதவிர, ஜமாத் - உல் - அஹ்ரார் அமைப்பின் தலைவர் அப்துல் வாலி மற்றும் லஷ்கர் - இ - இஸ்லாம் தலைவர் மங்கள் பாஹ் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.20 கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT