Published : 10 Mar 2018 10:53 AM
Last Updated : 10 Mar 2018 10:53 AM

தீவிரவாதி பற்றி தகவல் அளித்தால் ரூ.32 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முகாமிட்டு சண்டையிட்டு வருகிறது. இதன் விளைவாக, அல்-காய்தா அமைப்பின் தீவிரவாத செயல்பாடுகள் ஓரளவுக்கு ஒடுக்கப்பட்டுள்ளன. எனினும், அங்கு தலிபான் அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தி வரும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் மவுலானா பசுல்லா குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.32 கோடி சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்கா நேற்று அறிவித்தது.

இதுதவிர, ஜமாத் - உல் - அஹ்ரார் அமைப்பின் தலைவர் அப்துல் வாலி மற்றும் லஷ்கர் - இ - இஸ்லாம் தலைவர் மங்கள் பாஹ் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு தலா ரூ.20 கோடி சன்மானம் அளிக்கப்படும் எனவும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x