Published : 07 Mar 2018 09:42 AM
Last Updated : 07 Mar 2018 09:42 AM

மியான்மரில் இன அழிப்பு நீடிப்பதாக ஐ.நா. குற்றச்சாட்டு

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்கிறது என்று ஐ.நா. மனித உரிமை கமிஷன் தெரிவித்துள்ளது.

மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். அங்குள்ள அகதிகள் முகாம்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தொடர்ந்து ஏராளமான அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர். புதிதாக வந்த அகதிகள் குழுவை ஐ.நா. சபையின் மனித உரிமைகளுக்கான அமைப்பின் துணை பொதுச் செயலாளர் ஆண்ட்ரூ கிளிமோர் பார்த்தார்.

அப்போது அகதிகளிடம் அவர் பேசியதாவது:

மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீவிரவாதம் என்ற பிரசாரம் மூலமும் தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்காமலும் செய்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மியான்மர் அரசு அகதிகளைத் திரும்ப அழைத்துக் கொள்வதாகக் கூறினாலும் ராணுவம் அவர்களை வெளியேற்றி வருகிறது. இப்போதுள்ள சூழலில் அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்ப வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x