Published : 06 May 2019 11:54 AM
Last Updated : 06 May 2019 11:54 AM
காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 24 பேர் பலியானதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாலஸ்தீனம் தரப்பில், ”இஸ்ரேல் ராணுவத்துக்கும் காசாவில் உள்ள கிளர்ச்சியாளர்களின் குழுகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமையிலிருந்து கடும் சண்டை நடந்து வருகிறது கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த அதற்கு பதிலடியாக இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய வான்வழித் தாக்குதலில் பாலஸ்தீனர்கல் 24 பேர் பலியாகியுள்ளனர். ” என்று கூறப்பட்டுள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் 300க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதலை கடந்த வாரத்தில் நிகழ்த்தியுள்ளதாக பாலஸ்தீனம் குற்றச்சாட்டியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டி குறித்து இஸ்ரேல் தரப்பில் விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் காசா - இஸ்ரேல் எல்லை பகுதியில் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து பாலஸ்தீனம், இஸ்ரேல் இடையே மோதல் வலுத்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT