Published : 06 May 2019 05:34 PM
Last Updated : 06 May 2019 05:34 PM

அமெரிக்க நடன நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் வென்ற இந்தியக் குழு

மும்பையைச் சேர்ந்த நடனக் குழு ஒன்று அமெரிக்காவில் நடந்த 'வேர்ல்ட் ஆஃப் டான்ஸ்' நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையைப் பெற்றுள்ளது.

அமெரிக்க  நடன நிகழ்ச்சியான 'வேர்ல்ட் ஆப் டான்ஸ்' நிகழ்ச்சி என்பிசி சேனலில் ஒளிப்பரப்பாகி வருகிறது. இதில் நடுவர்களாக பிரபல பாடகி ஜெனிபர் லோபஸ் உள்ளார்.இந்த நடன நிகழ்ச்சியில் உலகில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனக் குழுக்கள் பங்கேற்றன.

இந்நிகழ்ச்சியின் 3-வது சீசனில் மும்பையைச் சேர்ந்த தி கிங்ஸ் என்ற 14 பேரைக் கொண்ட குழு தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி ஒரு மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்றது.

இந்நிலையில் வெற்றி பெற்ற தி கிங்ஸ் நடனக் குழுவுக்கு பாலிவுட் நடனக் கலைஞர் ஃபாரா கான் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x