

முன்னாள் போப்பாண்டவர்கள் 23-ம் ஜான், இரண்டாம் ஜான் பால் ஆகியோர் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
கத்தோலிக்க திருச் சபை வரலாற்றில் முதல்முறையாக இரண்டு போப்பாண்டவர்களுக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
வாடிகனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் இருவருக்கும் புனிதர் பட்டத்தை போப்பாண்டவர் பிரான்சிஸ் அறிவித்தார்.