Published : 29 May 2019 04:54 PM
Last Updated : 29 May 2019 04:54 PM

ஆப்கனில் பாதுகாப்புப் படை தாக்குதல்: 15 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் பல்வேறு இடங்களில் ஆப்கன் பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் 15  தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் சில தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் பதுங்கி இருந்த சுரங்கப் பாதைகளும் அழிக்கப்பட்டன” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தலிபான்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை ஆப்கான் ராணுவமும் உறுதிப்படுத்தியுள்ளது.

மாஸ்கோவில்  தலிபான் பிரதிநிதிகள் - ஆப்கன் தலைவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக பேசியிருந்த நிலையில் தலிபான்கள் மீது செவ்வாய்க்கிழமை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆப்கன் உள்நாட்டுப் போர்

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டு தலிபான்களுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x