ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் பலி

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல்: பொதுமக்கள் 6 பேர் பலி
Updated on
1 min read

சவுதி கூட்டுப் படைகள் ஏமனி சனா பகுதியில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர் பலியாகினர். 50க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஏமன் தலைநகர் சனாவில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டு பகுதியில்  சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில்  மருத்துவமனையில் பணியில் இருந்த இரு ரஷ்ய பெண்களும் காயமடைந்தனர்.” என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டிருந்தது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in