Published : 17 May 2019 05:56 PM
Last Updated : 17 May 2019 05:56 PM
ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில்,”ஆப்கானிஸ்தானின் தென்பகுதி மாகாணமான ஹெல்மண்ட் மாகாணத்தில் அயல் நாட்டு ராணுவம் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீஸார் 17 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில் முகாமிட்டு சண்டையிட்டு வரும் அமெரிக்க படைகள் நடத்தி இருக்கலாம் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT