Published : 18 Apr 2019 05:45 PM
Last Updated : 18 Apr 2019 05:45 PM
காங்கோவில் பயணிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர். 150 பேர் மாயமாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் ”காங்கோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கிவு ஏரியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் 150 பேர் மாயமாகினர். 3 பேர் பலியாகினர். 25- க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து காங்கோ அதிபர் ஃபேலிக்ஸ். இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான அந்தக் குடும்பத்தினரின் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்” என்றார்.
படகில் அளவுக்கு மீறி ஆட்களை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்றும், பயணம் செய்தவர்களுக்கு லைஃப் ஜாக்கெட் கூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் விபத்து குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளிவரவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT