Published : 16 Apr 2019 01:03 PM
Last Updated : 16 Apr 2019 01:03 PM
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்துக்கு செல்ல வேண்டாம் என தனது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
பாகிஸ்தான் செல்லும் தங்கள் குடிமக்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில் பாகிஸ்தானில் மாகாணங்களை அங்கு நிலவும் பாதுகாப்புகளை அடிப்படையாகக் கொண்டு பல பிரிவுகளாக பிரிந்துள்ளன.
இதுகுறித்து அமெரிக்கா வெளியுறவுத் துறை திங்கட்கிழமை கூறும்போது, ‘‘பாகிஸ்தானின் பலுசிஸ்தான், கைபர் பக்துன்குவா மாகாணங்கள் ஆபத்தான மாகாணமாக உள்ளன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளும் இந்த பிரிவின் கீழ் வருகின்றனர்.
இதனால் இத்தகைய மாகாணங்களுக்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு குடிமக்கள் பயணம் செய்யாதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கான நிதி மற்றும் பொருளாதார ஆதரவு தருவதை உடனடியாக பாகிஸ்தான் முடக்க வேண்டும். தீவிரவாத அமைப்புகளின் சொத்துக்களை முடக்குவதுடன், அவர்கள் நிதி திரட்டுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT