Published : 11 Apr 2019 02:33 PM
Last Updated : 11 Apr 2019 02:33 PM
பிரேசிலில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள், “ பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கனமழையின் காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் தொடர்ந்து 9 மணி நேரமாக மழை பெய்துள்ளது (சுமார் 246 மிமீ ஆக மழையின் அளவு பதிவாகி உள்ளது.)
இந்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். 3000க்கும் மேற்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்சாரம் ஒயர்கள் கீழே விழுந்ததுள்ளதால், தண்ணீர் வடியும்வரை பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசு வலியுறுத்தி உள்ளது.
பிரேசிலில் கடந்த சில மாதங்களில் அதிகபட்சம் மழை பொழிவை ஏப்ரல் மாதம் கண்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT