Published : 26 Apr 2019 12:49 PM
Last Updated : 26 Apr 2019 12:49 PM

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: காவல்துறை தலைவர் ராஜினாமா

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக காவல்துறை தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359  என்று கூறப்பட்டு வந்த நிலையில் பலி எண்ணிக்கை  253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பாதுகாப்புத் துறையின் முக்கிய அதிகாரிகளை ராஜினாமா செய்யும்படி இலங்கை அதிபர் சிறிசேனா புதன்கிழமை கேட்டுக்கொண்டார்.

ஐஜிபி ஜெயசுந்தரா மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் ஃபெர்னாண்டோ ஆகியோரை ராஜினாமா செய்யும்படி இலங்கை அதிபர் சிறிசேனா வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து  காவல்துறை தலைவர் ஜெயசுந்தரா ராஜினாமா செய்திருப்பதாக அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x