Published : 26 Apr 2019 11:30 AM
Last Updated : 26 Apr 2019 11:30 AM
இலங்கை தொடர் குண்டுவெடிப்பின் முக்கியக் குற்றவாளியான ஜஹ்ரான் ஹாஷிம் குண்டுவெடிப்பில் பலியானார் என்று அந்நாட்டு அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் கடந்த 21-ம் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 359 என்று கூறப்பட்டு வந்த நிலையில் பலி எண்ணிக்கை 253 என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த பலர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் பலருக்கு உள்ளூர் தீவிரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாத்துக்கு தொடர்பு இருந்தது. அதே நேரம் இந்த அமைப்பு தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில், தேடப்பட்டு வந்த தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் ஹாஷிம் தொடர் குண்டுவெடிப்பில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை அதிபர் சிறிசேனா கூறும்போது, ''தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஜஹ்ரான் இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானார் என்று புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT