துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம்: நியூஸிலாந்து அமைச்சகம் ஒப்புதல்

துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம்: நியூஸிலாந்து அமைச்சகம் ஒப்புதல்
Updated on
1 min read

துப்பாக்கி விதிகளைக் கட்டுப்படுத்தி புதிய மாற்றங்களை ஏற்படுத்த நியூஸிலாந்து அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

இதுகுறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜேசிந்தா ஹர்டன் கூறும்போது, ''துப்பாக்கிச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த திங்கட்கிழமை அமைச்சகம் கூடுவதற்கு முன்னதாக செயல்படுத்தப்படும். இது செயல்படுவதற்கான நேரம்'' என்றார்.

துணை பிரதமர் வின்சென்ட் பீட்டர்ஸ் கூறும்போது, ''நாங்கள் முடிவு எடுத்துவிட்டோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம்'' என்றார்.

நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமையன்று முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இதில்  50 பேர் பலியாகினர். இதில் 7 பேர் இந்தியர்கள்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in