Published : 02 Mar 2019 12:59 PM
Last Updated : 02 Mar 2019 12:59 PM
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தைக் கிண்டலாக தனது நிகழ்ச்சியில் கூறிய தென் ஆப்பிரிக்க காமெடி நடிகர் ட்ரெவர் நோவா கூறியது சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் நடந்த விமானத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறை பிடித்தது.
இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனைத் தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள் இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டன.
இதனிடையே நேற்று (வியாழக்கிழமை) பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பேசிய அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான், ''அமைதி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் விடுவிக்கப்படுவார்'' என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அபி நந்தன் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவிய போர் பதற்றத்தை தனது நிகழ்ச்சி ஒன்றில் தென் ஆப்பிரிக்க நடிகர் ட்ரெவர் நோவா கிண்டலாகக்கூறியது விமர்சனத்துக்கு உள்ளானது.
அந்த நிகழ்ச்சியில் ட்ரெவர் நோவா , ''நான் இந்தியாவும், பாகிஸ்தான் போர் செய்யாது என்று நம்புகிறேன். ஒருவேளை அவர்கள் போர் செய்தால் வரலாற்றில் மிகவும் பொழுதுபோக்கான போராக இருக்கும்'' என்று கிண்டலாகக் கூறினார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
போர் உங்களுக்குப் பொழுதுபோக்கா? என்று பலரும் அவரை விமர்சித்துப் பதிவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT