Published : 04 Mar 2019 04:23 PM
Last Updated : 04 Mar 2019 04:23 PM

இறுதிக்கட்டப் போர்: தீவிரவாதிகள் தாக்குதலில் சிரிய பாதுகாப்புப் படை வீரர்கள் 22 பேர் பலி

சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து சானா வெளியிட்ட செய்தியில், ''சிரியாவில் இறுதிப் போர் நடைபெறும் இட்லிப் மாகணத்தில் சிரிய கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புடைய அல்கொய்தா தீவிரவாதிகள் சிரிய பாதுகாப்புப் படையினர் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 22 பேர் பலியாகினர்'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த  நிலையில் ஐஎஸ் வசமுள்ள டோமா, இட்லிப்  போன்ற பகுதிகளை மீட்க இறுதிப் போர் நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x