Published : 30 Mar 2019 12:05 PM
Last Updated : 30 Mar 2019 12:05 PM

தெரசா மே கொண்டு வந்த பிரெக்ஸிட் தீர்மானம் 3-வது முறையாக தோல்வி

ஐரோப்பிய யூனியலிருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பாக  பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்தது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்ஸிட் தீர்மானத்தின் மீது 2016-ல் இங்கிலாந்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பாலான மக்கள் பிரெக்ஸிட் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மார்ச் மாதத்துக்குள் கொண்டுவர தீர்மானம் செய்யப்பட்டது.

அதன்படி, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகளைக் கொண்ட பிரெக்ஸிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பிரதமர் தெரசா மே இதற்கான முயற்சிகளைத்  தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.

ஆனால் இந்தத் தீர்மானம் மூன்றாவது முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.

மே 22-ம் தேதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேற இருந்த நிலையில், தீரமானங்கள் தொடர்ந்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்து வருவதால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஏப்ரல் 12-ம் தேதிக்குள் பிரிட்டன் தெரிவிக்க வேண்டும்.

இந்த நிலையில் மீண்டு பிரெக்ஸிட் தொடர்பான தீர்மானத்தைக் கொண்வர தெரசா மே தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தெரசா மேவின்  செய்தித் தொடர்பாளர் இதுபற்றி கூறும்போது, ''இது நாங்கள் எதிர்பார்த்த முடிவல்ல. ஆனால் தற்போது கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக இருக்கின்றனர். நாங்கள் இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. குறைந்தபட்சம் நாங்கள் இப்போது சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x