அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி
Updated on
1 min read

அமெரிக்கா சியாட்டில் நகரில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் திறந்த வெளியில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில்,”  சியாட்டில் நகரின் வடக்கிழக்குப் பகுதியில் சாலை வழியாக நடந்து வந்த நபர் பேருந்து மற்றும் அங்கு ஓடிக் கொண்டிருந்த காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் தடுமாறிய பேருந்தை ஓட்டு நர் லாவகமாக ஓட்டியதால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் பதிலளிக்க மறுத்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in