Published : 18 Mar 2019 05:17 PM
Last Updated : 18 Mar 2019 05:17 PM

நெதர்லாந்து துப்பாக்கிச் சூடு: பலர் காயம்

நெதர்லாந்து  யுடெர்ட் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்து இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், “  நெதர்லாந்து கிழக்குப் பகுதியில் உள்ள  யுடெர்ட் நகரில் இன்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்  பலர் காயமடைந்துள்ளனர். ஹெலிகாப்டர்களை கொண்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது .

காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதற்காக யுடெர்ட் பல்கலைகழகம் திறக்கப்பட்டுள்ளது ” என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவரேனும் உயிரிழந்து விட்டனரா என்பது குறித்த தகவலை அளிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.

இது தீவிரவாத தாக்குதல் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து விசாரித்து வருவதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x