Published : 09 Mar 2019 04:50 PM
Last Updated : 09 Mar 2019 04:50 PM

வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தினால் நிச்சயம் ஏமாற்றம் அடைவோம்: அமெரிக்கா

வடகொரியா அணுஆயுத சோதனை நடத்தினால் நாங்கள் நிச்சயம் ஏமாற்றம் அடைவோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கூறும்போது “எங்களுக்கு இடையே உள்ள புரிதலை மீறி வடகொரிய அதிபர் கிம் எதிர்வினையாக எதாவது செய்தால் நிச்சயம் ஆச்சரியப்படுப்வேன். நிச்சயம் வடகொரியா அணுஆயுத சோதனைகளை  நடத்தினால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

முன்னதாக தென் கொரியாவின் உளவு தரப்பிலிருந்து, வடகொரியா ஏவுகணை தளத்தை மறுக்கட்டமைப்பு செய்து வருகிறது என்ற தகவல் வெளியாகியது. இந்த  நிலையில் இதனை ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த வாரம்  நடந்தது.

அணு ஆயுத சோதனை மையங்களையும் மூடிவிட வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் விருப்பமும், வடகொரியா மீது விதிக்கப்பட்ட அமெரிக்க வர்த்தகத் தடைகள் அனைத்தையும் ட்ரம்ப் நீக்க வேண்டும் என்ற வடகொரிய அதிபர் கிம்மின் விருப்பமும் நிறைவேற்றப்படாமல் இந்தச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது.

இந்தச் சந்திப்பில் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை. ஆனால் இரு நாடுகளின் குழுக்களும் எதிர்காலத்தில் சந்திக்க எதிர்நோக்கியுள்ளன என்று இரு நாடுகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x