Published : 06 Mar 2019 07:40 AM
Last Updated : 06 Mar 2019 07:40 AM
சீனாவின் பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு 7.5 சதவீத கூடுதல் தொகை இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
2019-20-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சீன நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்காக 177.61 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 7.5 சதவீதம் அதிகமாகும். உலகின் 2-வது பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் சீனா ஆண்டுதோறும் பாதுகாப்புத் துறைக்கு கூடுதல் நிதியை ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவையடுத்து ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி வருவது சீனா என்பது தெரியவந்துள்ளது. சீன ராணுவத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்காக அரசு உறுதி பூண்டுள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். சுமார் 20 லட்சம் ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தில் உள்ளனர்.
நடப்பு நிதியாண்டில் இந்தியா ராணுவத்துக்காக ரூ.3.18 லட்சம் கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT