Published : 23 Mar 2019 04:44 PM
Last Updated : 23 Mar 2019 04:44 PM
சிரியாவில் ஐஎஸ் படைகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா ஆதரவு பெற்ற அந்நாட்டுப் படைகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''ஐஎஸ்ஸுக்கு எதிரான இறுதிப் பகுதியும் மீட்கப்பட்டன. ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியா மற்றும் இராக்கில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். மீதமுள்ள தீவிரவாதக் குழுகளுக்கு எதிராக சண்டை தொடரும்'' என்றார்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்த உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT