Published : 08 Sep 2014 08:51 AM
Last Updated : 08 Sep 2014 08:51 AM

தியாகி ஆவதற்கு ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த ஸ்காட்லாந்து பெண்

தான் ஒரு தியாகி ஆவதற்காக, வீட்டைவிட்டுப் பிரிந்து சிரியாவுக்குச் சென்று அங்குள்ள ‘இஸ்லாமிக் ஸ்டேட்' அமைப்பைச் சார்ந்த ஒருவரை மணம் முடித் திருக்கிறார் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த‌ ஒரு பெண்.

ஸ்காட்லாந்தில் உள்ள க்ளாஸ்கோ நகரத்தில் வசிப்பவர் முசாபர் மஹ்மூத். இவருடைய மகள் அக்சா மஹ்மூத் (20). இவர் கடந்த நவம்பர் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி சிரியாவுக்குச் சென்றுள்ளார்.

துருக்கி வழியாக சிரியாவை அடைந்த அவர் துருக்கி எல்லை யில் இருந்து தன்னுடைய வீட்டை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். அப்போது, தான் தியாகி ஆக விரும்புவதாகவும் அதனால் ஐ.எஸ். அமைப்பில் சேரப் போவதாகவும், நீதி நாளின்போது தன் பெற்றோரை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறினார்.

வீட்டைவிட்டு வெளியேறி யவுடன் தனது ட்விட்டர் கணக்கு மூலம், இஸ்லாமியர்களைத் தீவிரவாதத் தாக்குதல்கள் மேற் கொள்ள அழைப்பு விடுத்திருந்தார். அந்தப் பதிவுதான் கடைசி. அதன் பிறகு அந்த ட்விட்டர் கணக்கு அழிக்கப்பட்டுவிட்டது.

தீவிரவாதக் குழுக்களில் சேரும் மேலை நாட்டுப் பெண்களில் சமீபத்திய உதாரணம் இவர். இவரைப் போன்று மேலும் 200 மேலைநாட்டுப் பெண்கள் தீவிரவாதக் குழுக்களில் சேர்ந் திருப்பதாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் ஆய்வாளர் மெலனி ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்துள்ள 21 மேற்கத்தியப் பெண்களின் ட்விட்டர் பக்கங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தான் தியாகி ஆக விரும்புவதாகவும் அதனால் ஐ.எஸ். அமைப்பில் சேரப் போவதாகவும் அக்சா மஹ்மூத் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x