Published : 28 Mar 2019 01:06 PM
Last Updated : 28 Mar 2019 01:06 PM

முஸ்லிம்கள் மீதான சீனாவின் நடவடிக்கைகள் வெட்கக்கேடான செயல்: கடுமையாக விமர்சித்த அமெரிக்கா

முஸ்லிம்கள் மீதான சீனாவின்நடவடிக்கைகள்வெட்கக்கேடான செயல் என்று அமெரிக்க  வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சீன சிறைகளில் அந்த நாட்டிலுள்ள சிறுப்பான்மையின மக்களுக்கு எதிராக கொடுமைகள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சீனா அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் சித்தரவதைகளை அனுபவித்த யுகுர் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முன்னாள சிறைவாசி ஒருவரை மைக் பாம்பியோ சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான சீனாவின் அடக்குமுறைகளை அவர் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து மைக் பாம்பியோ தனது ட்விட்டர் பக்கத்தில், ‘‘சீனா அதன் சொந்த நாட்டில் லட்சக்கணக்கான முஸ்லிகளை துன்புறுத்திக் கொண்டு மறுபக்கத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் தீவிரவாத இயக்கங்களை அவற்றின் மேல் விழும் தடைகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கிறது.

 சீனா அரசு தன்னிச்சையாக கைது செய்துள்ள சிறுபான்மை மக்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் மீதான சீனாவின் நடவடிக்கைகள் வெட்ககேடான செயல். சீனாவின் ஒடுக்குமுறை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x