Published : 01 Mar 2019 03:45 PM
Last Updated : 01 Mar 2019 03:45 PM
பெருவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ” பெருவின் தென் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7. 1 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்க அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டது” என்று கூறியுள்ளனர்.
இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.இதன் ஆழம் 260 கிலோ மீட்டராகவும், இந்த நில நடுக்கத்தின் மையம் வடகிழக்கு அசாங்கராவிலிருந்து 27 கிலோ மீட்டரில் உள்ளது.'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.
தென் அமெரிக்க நாடான பெருவில் வருடத்துக்கு சுமார் 200 நிலநடுக்கங்கள் வரை ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்களால் உணரப்பட முடியாதவை.
முன்னதாக, பெருவில் 2007-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT