Published : 16 Feb 2019 05:21 PM
Last Updated : 16 Feb 2019 05:21 PM

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து  போலீஸார் தரப்பில், ''அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தில்  உள்ள அரோராவில் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அதே அலுவலகத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் பெயர் கேரி மார்டின். இவர் ஹென்றி பிராட் அலுவலகத்தில் 15 வருடங்கள் பணிபுரிந்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான முழுமையான காரணம் தெரியவில்லை. எனினும் ஹென்றி சில நாட்களாவே மன அழுத்தத்தில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து தொடர்ந்து விசாரணை  நடந்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ''போலீஸாரின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள். அமெரிக்கா உங்களுடன் இருக்கும்'' என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x