பிரேசில் எல்லையை மூட உத்தரவிட்ட வெனிசுலா அதிபர்

பிரேசில் எல்லையை மூட உத்தரவிட்ட வெனிசுலா அதிபர்
Updated on
1 min read

பிரேசிலுடனான எல்லையை மூட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரேசில் அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொலைக்காட்சியில் வியாழக்கிழமை பேசும்போது, ”வெனிசிலாவுடனான பிரேசில் எல்லைப் புறத்தை  மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்க் கட்சிகள் கூறுவதுபோல் வெனிசுலாவில் எந்த  நெருக்கடியும் இல்லை. கொலம்பியாவின் எல்லையை மூட ஆலோசித்து வருகிறோம்” என்றும் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடுகளில் எண்ணெய் வளம் உள்ள நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று.  இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாக சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன.

கடும் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றாலும், அரசியல் நிலையற்ற தன்மையாலும் வெனிசுலா திண்டாடி வருகிறது. மதுரோவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் தொடர்ந்து வீதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் எதிர்க்கட்சித் தலைவர் கைடோ அமெரிக்கா ஆதரவுடன் தன்னை இடைக்கால அதிபராக அறிவித்துக் கொண்டு சர்வதேச நாடுகளின் உதவியுடன் வெனிசுலா மக்களுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவி வழங்க வேண்டும் என்றும் கூறி வருகிறார். இதனால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில் வெனிசுலா மீது அமெரிக்கா கடந்த மாதம் புதிய பொருளாதாரத் தடைகளை விதித்தது.

மேலும் வெனிசுலா மக்கள்  நெருக்கடியில் இருக்கின்றனர் என்று தொடர் பிரச்சாரங்களில் அமெரிக்க அதிபர் ஈடுபட்டு வருகிறார். மேலும் கொலம்பியா மூலம் வெனிசுலா மக்களுக்கானயும் உதவிகளையும் மதுரோ தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in