Published : 13 Feb 2019 05:26 PM
Last Updated : 13 Feb 2019 05:26 PM

ஆப்பிளுக்குப் பதிலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசிய சுற்றுலாப் பயணி

சில நேரங்களில் நாம் நினைப்பது ஒன்றாக இருக்கும்; நடப்பது வேறாக இருக்கும். அத்தகைய சம்பவமொன்று சீனாவில் நடந்துள்ளது.

சுற்றுலாப் பயணி ஒருவர், ஆப்பிள் பழம் என நினைத்து தவறுதலாக ஆப்பிள் ஐபோனை கரடிக்குத் தூக்கி வீசியுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் யான்செங் வனவிலங்குகள் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணி ஒருவர், கரடிகளைப் பார்த்து நின்றுள்ளார். இரண்டு கரடிகளும் அவரை ஆர்வமாகப் பார்க்க, கையில் இருந்த ஆப்பிள் பழத்தைத் தூக்கி வீச எத்தனித்துள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக மற்றொரு கையில் இருந்த ஆப்பிள் ஐபோனைத் தூக்கி வீசிவிட்டார். ஐபோனை முகர்ந்து பார்த்த கரடி, அதை வாயில் கவ்விக்கொண்டு உள்ளே சென்றது.

எனினும் பூங்காவைச் சேர்ந்த ஊழியர், விலை உயர்ந்த ஐபோனை, மீட்டு சுற்றுலாப் பயணியிடம் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x