Published : 22 Feb 2019 11:59 AM
Last Updated : 22 Feb 2019 11:59 AM

சிரியாவில் 200 வீரர்கள் அமைதிக்குழுவாக இருப்பார்கள்: அமெரிக்கா

சிரியாவில் அமெரிக்காவின் 200 வீரர்கள் அமைதிக் குழுவாக இருப்பார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிகை செய்தித் தொடர்பாளர் சாரா கூறும்போது, ''அமெரிக்காவைச் சேர்ந்த 200 ராணுவ வீரர்கள் அமைதிக் குழுவாக சிரியாவில் சிறிது காலத்திற்கு இருப்பார்கள்'' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தொலைபேசி வாயிலாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் பேசியதை அடுத்து இந்த முடிவை வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

இந்த உள்நாட்டுப் போரில்  குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்களை அனுப்பி சண்டையிட்டது .

இந்நிலையில் டிசம்பர் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ''சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டோம். ஐஎஸ் தீவிரவாதிகளைத் தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப் படை வெற்றி பெற்றுவிட்டது. ஆதலால், சிரியாவில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறும்'' என்று அறிவித்தார்.

இதற்கு பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் மீண்டும் கணிசமான அளவில் அமெரிக்கப் படைகள் சிரியாவில் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இதனை அமெரிக்கா தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x