Published : 02 Feb 2019 12:57 PM
Last Updated : 02 Feb 2019 12:57 PM
ஈரானில் உள்ள பசிஜ் ராணுவத் தளத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். 5 பேர் காயமடைந்தனர்.
நிக்ஷாஹ்ரின் தென்கிழக்குப் பகுதியில் பசிஜ் நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ராணுவத் தளத்தில் காலையில் தேசியக் கொடி ஏற்றப்படும் போது தாக்குதல் நடந்தது. சனிக்கிழமை காலையில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
பசிஜ் ராணுவத் தளம் ஈரானின் வலிமைவாய்ந்த பாதுகாப்புப் படையின் ஓர் அங்கமாகும்.
சிஸ்டன் - பலுசிஸ்தான் மாகாணத்தில் நிக்ஷாஹ்ர் பகுதி அமைந்துள்ளது.
கடந்த வாரத்தில் சஹேதான் பகுதியில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் காவல் துறையினர் 3 பேர் காயமடைந்தனர். பலூச் பிரிவினைவாதிகளும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றனர்.
கடந்த டிசம்பர் மாதம், துறைமுக நகரமான சபஹரில் காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் காவல்துறையினர் 2 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT