Last Updated : 04 Feb, 2019 10:03 PM

 

Published : 04 Feb 2019 10:03 PM
Last Updated : 04 Feb 2019 10:03 PM

விஜய் மல்லையாவை இந்தியா வசம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறை செயலர் உத்தரவு

வங்கிக்கடன் மோசடி உள்ளிட்ட நிதிமோசடிகள் தொடர்பான வழக்கில் விசாரணை நடத்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க பிரிட்டன் உள்துறைச் செயலர் சாஜித் ஜாவித் உத்தரவிட்டுள்ளார்.

 

இப்போது இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து விஜய் மல்லையா அங்கு உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்திய நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு பதில் அளிப்பதற்கான போதிய விவகாரங்கள் அவர் மீது எழுப்பப்பட்டுள்ளதை லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மேஜிஸ்ட்ரேட்ஸ் நீதிமன்றம் டிசம்பர் 10. 2018-ல் ஏற்றுக் கொண்டது.

 

நாடுகடத்தல் ஒப்பந்த நடைமுறைகளின் படி தலைமைநீதிபதியின் உத்தரவு உள்துறை செயலருக்கு அனுப்பப்பட வேண்டும், அவர்தான் இது குறித்த உத்தரவைப் பிறப்பிக்க அதிகாரம் உடையவர்.

 

இந்நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கையெழுத்திட பிரிட்டனின் மூத்த பாகிஸ்தான் வம்சாவளி அமைச்சர் சாஜித் ஜாவித் கையெழுத்திட 2 மாத கால அவகாசம் இருந்தது. 

 

பிரிட்டன் உள்துறை அலுவலகம் இன்று கூறும்போது பல விஷயங்களையும் பரிசீலித்த பிறகு அமைச்சர் இன்று மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அனுமதி அளித்து கையெழுத்திட்டுள்ளார்.

 

“இந்தியாவில் விஜய் மல்லையா மீது மோசடி சதி வழக்கு, மற்றும் நிதிமோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பிப்ரவரி 3ம் தேதி உள்துறை அலுவலகம் இது தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனமாகப் பரிசீலித்து விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கையெழுத்திடப்பட்டது.

 

இப்போது விஜய் மல்லையா இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய 14 நாட்கள் அவகாசம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x