Published : 28 Feb 2019 12:29 PM
Last Updated : 28 Feb 2019 12:29 PM
பாகிஸ்தான் உங்கள் எதிரி அல்ல. உங்கள் எதிரிதான் எங்கள் எதிரியும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடிப்பு என்று இந்தியா - பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”இந்தியா பாகிஸ்தான் உங்கள் எதிரி அல்ல, உங்கள் எதிரிதான் எங்களுக்கும் எதிரி. நாம் இருவரும் ஒரே போர்க் களத்தில் சண்டையிடுகிறோம் என்பதை அறிய எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டும்? பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரை நாம் வெல்ல வேண்டுமென்றால், நமக்கு சகோதரர்கள் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT