Published : 23 Feb 2019 10:40 AM
Last Updated : 23 Feb 2019 10:40 AM

பெரு - ஈக்வேடார் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவின்  பெரு - ஈக்வேடார் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ''பெரு - ஈக்வேடார் எல்லைப் பகுதியில் பிப்ரவரி 22-ம் தேதி மிக ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 30 விநாடிகள் அதிர்வு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

தென் அமெரிக்க நாடான பெருவில் வருடத்துக்கு சுமார் 200 நிலநடுக்கங்கள் வரை ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மக்களால் உணரப்பட முடியாதவை.

முன்னதாக, பெருவில் 2007-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்துக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x