Published : 30 Jan 2019 09:26 AM
Last Updated : 30 Jan 2019 09:26 AM

ஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே: தீர்ப்பை உறுதி செய்தது பாக். நீதிமன்றம்

கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே என்று பாகிஸ்தான் நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தானில் மதநிந்தனை வழக்கில் மரண தண்டனை விதிக் கப்பட்ட கிறிஸ்தவ பெண் ஆசியா பீவியை உச்ச நீதிமன்றம் அண்மையில் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது. தீவிர மதபற்றாளர்கள் பலர், ஆசியா வுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆசியா பீவியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவர் நாட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பும் இருந்தது. இதனால் அவர் தலைமறைவாக இருக் கிறார். இந்நிலையில் அவரது விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நேற்று தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது மறுசீராய்வு மனுவை தலைமை நீதிபதி கோசா தள்ளுபடி செய்தார். மேலும் ஆசியா பீவியை விடுதலை செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.

இஸ்லாம் மதத்தை அவ தூறாகப் பேசியதாகக் கூறி பாகிஸ்தான் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீவி மீது கடந்த 2009-ல் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. அதை லாகூர் உயர் நீதிமன்றம் 2010-ல் உறுதி செய்தது. இந் நிலையில் இதை எதிர்த்து ஆசியா பீவி சார்பில் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. 9 ஆண்டு களாக சிறையில் இருந்த அவர் உடனடியாக விடுதலையானார். பின்னர் தனி விமானம் மூலம் அவர் லாகூரிலிருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் தங்கியிருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x