Last Updated : 24 Sep, 2014 03:03 PM

 

Published : 24 Sep 2014 03:03 PM
Last Updated : 24 Sep 2014 03:03 PM

சிரியா: அமெரிக்க வான்வழித் தாக்குதலில் 58 பேர் பலி

சிரியாவில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 58 கொல்லப்பட்டதாக ஐ.நா. கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

சிரியா மற்றும் இராக்கில் ஆக்கிரமித்து வந்த ஐ.எஸ்-ஸுக்கு எதிரான வான்வழித் தாக்குதலை சிரியாவின் மேற்கு நகரமான அலீபோ எல்லையோரம் அமெரிக்கப் படைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்கிழமை நடத்திய தாக்குதலில் மட்டும் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் 50 பேர் கிளர்ச்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்பட்டதாகவும், மற்றவர்கள் பொதுமக்கள் என்றும், அங்கு இருக்கும் ஐ.நா. கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.

மேலும், சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்த இருப்பதாக அமெரிக்கா முன்பே எச்சரித்து இருந்ததாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி பொதுமக்களுள் 8 பேர் பலியானது வருத்தம் அளிப்பதாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x