Published : 18 Jan 2019 03:08 PM
Last Updated : 18 Jan 2019 03:08 PM

ட்ரம்ப் எச்சரிக்கையை மீறி எல்லை தாண்டி வரும் வெளிநாட்டினர்: அமெரிக்கா போலீஸார் அதிர்ச்சி

அரிசோனா மாகாணத்தின் வழியே அமெரிக்கா எல்லை தாண்டி வந்த கவுதமாலா நாட்டினர் 375 பேர் அமெரிக்க ரோந்துப் போலீஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க-மெக்ஸிகோ எல்லையில் புதிய தடுப்புச் சுவர் கட்டுவதற்காக நிதி கோரிய பிறகு நாட்டில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்ட பிறகும் இப்படியொரு சம்பவம் நடந்துள்ளது அந்நாட்டினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யத் தொடங்கி இன்றோடு 28 நாட்கள் ஆகின்றன. இந்த வேலைநிறுத்தத்திற்கும் சேர்த்து எல்லையில் சுவர் கட்டுவதுதான் ஒரே தீர்வு என்று அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அரிசோனா மாகாணத்தின் யூமா நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த அமெரிக்க எல்லை ரோந்து அதிகாரிகள் இன்று காலை கவுதமாலா நாட்டைச் சேர்ந்த 375 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து தேசிய எல்லை ரோந்துக்குழு தலைவர் பிராண்டன் ஜூடு தெரிவிக்கையில், ''அடிக்கடி இப்படி, 20 அல்லது 30 பேர் கொண்ட கும்பல்கள் வருவதுண்டு. சில நேரங்களில் 100 பேர் கொண்ட பெரிய கூட்டமாகவும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இந்த அளவுக்கு 375 பேர் மிகப்பெரிய அளவில் குடும்பம் குடும்பமாக வந்துள்ள இவர்கள் கவுதமாலா நாட்டிலிருந்து வந்துள்ளார்கள் என்பது மிகப்பெரிய பீதியைக் கிளப்பியுள்ளது. ட்ரம்ப் எச்சரிக்கையை மீறி தொடரும் இச்செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது'' என்றார்.

கடந்த நவம்பர் மாதம் சான் லூயிஸ் துறைமுகத்தின் கிழக்கு நுழைவாயில் பகுதியில் உள்ள பாய்மர எல்லைச் சுவரின் மீதேறி அங்கிருந்து குதித்து குடும்பங்களாக வந்த 80 பேர் பிடிபட்டனர். சில மணி நேரங்களிலேயே இன்னொரு 80 பேர் கொண்ட கும்பல் அதே சுவரின் மேல்பகுதியில் துளையிட்டுக்கொண்டு வெளியே வந்தபோது கைதாகினர்.

யூமா என்ற ஒரு நகரத்தில் மட்டும் கடந்த ஆண்டில் 2,117 பேர் அத்துமீறி எல்லை கடந்துள்ளனர். இதன்மூலம் கடந்த ஆண்டுவரை இந்நகரத்தின் வழியே மட்டும் 26,244 பேரை எல்லை ரோந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x