Published : 30 Jan 2019 06:20 PM
Last Updated : 30 Jan 2019 06:20 PM
பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் மசூதி ஒன்றில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில், ''பிலிப்பைன்ஸின் தென் பகுதியிலுள்ள சாம்போங்கா நகரில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். சட்டம்- ஒழுங்கைச் சீர்குலைக்கவே இந்த நடவடிக்கையில் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலுக்கு பிலிப்பைன்ஸ் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் தொடர்ந்து சட்டம்- ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
முன்னதாக, இந்த வாரம் தொடக்கத்தில் பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 20 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT