Published : 17 Dec 2018 08:12 AM
Last Updated : 17 Dec 2018 08:12 AM
பாகிஸ்தானின் பெஷாவர் பகுதி யில் உள்ள கிறிஸ்தவ குடியிருப் பில் 2016-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தினர் மேற்கொண்ட விசா ரணையில், தலிபானிடமிருந்து பிரிந்து வந்த ஜமாத் -உர் - அஹ்ரார் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த ராணுவ நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 35 பேரில் 15 பேருக்கு மரண தண்டனை விதித்தும், மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT