Published : 18 Dec 2018 04:42 PM
Last Updated : 18 Dec 2018 04:42 PM

சில நிமிடங்களிலேயே கைவிடப்பட்ட ஏமன் போர் நிறுத்தம்

அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏமன் போர் நிறுத்தம் கைவிடப்பட்டதாக  அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஏமன் அரசு ஆதரவு அதிகாரிகள் தரப்பில், ”ஏமன் கடற்கரை நகரான ஹுடைடாஹ் நகரில் செவ்வாய்க்கிழமையன்று போர் நிறுத்தத்துக்கு அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பும் சம்மதம் தெரிவித்தது. இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்களுக்கு உதவிகள் செல்லும் முக்கியப் பாதையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஏமன் அரசுப் படைகள் சண்டையிட்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கு சண்டை நடந்து வருகிறது” என்று கூறியுள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.

இப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x