Last Updated : 30 Sep, 2014 09:55 AM

 

Published : 30 Sep 2014 09:55 AM
Last Updated : 30 Sep 2014 09:55 AM

பெருவில் நிலநடுக்கம்

தென்அமெரிக்க நாடான பெருவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக் கானோர் காயமடைந்தனர். பெரு நாட்டின் பெருரோ மாகாணம், கியூசோ பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை யில் நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அலகில் 5.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் 8 பேர் இறந்தனர்.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். அவர் களில் பலரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x