Published : 01 Sep 2014 11:05 AM
Last Updated : 01 Sep 2014 11:05 AM

ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் உதவ வேண்டும்: பிரதமர் மோடி

ஆராய்ச்சி, திறன் மேம்பாட்டுத் துறைகளில் ஜப்பான் அரசின் உதவியை இந்தியா வேண்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

"இந்தியாவில் நிறைய இளைஞர்கள் இருக்கின்றனர். இந்திய இளைஞர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தால், அவர்கள் உலகில் எங்குவேனாலும் பணியாற்றும் அந்தஸ்தை பெறுவர். எனவே, திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கு ஜப்பான் உதவ வேண்டும்" என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி கியோட்டா நகரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்தார்.

3–ம் நாளான இன்று (திங்கட்கிழமை) டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேவை மோடி சந்தித்து பேசுகிறார். இதற்கு முன்னதாக வர்த்தக கூட்டமைப்பினர் மத்தியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர்: "ஜப்பானிய நிறுவன முதலீடுகளை வரவேற்கிறோம். ஜப்பான் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதலீட்டிற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும். ஜப்பான் நிறுவனங்களின் முதலீடுகளை கவனிக்க பிரத்யேகமாக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழு, பிரதமர் அலுவலகத்திலேயே செயல்படும். குஜராத் முதல்வராக இருந்தபோதே ஜப்பானுடன் நல்ல இணக்கம் இருந்தது. குஜராத்தில், என்ன மாதிரியான முதலீட்டுச் சூழலை ஜப்பான் எதிர்கொண்டதோ அதே சூழல் இனி இந்தியா முழுவதும் நிலவும்" என்றார்.

சீனாவுக்கு குட்டு?

18-ம் நூற்றாண்டில் நிலவியதுபோல், நாடுகளை ஆக்கரமிக்கும் வேலையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். கடல் வழியாகவும் ஆக்கிரமிப்புகள் நிகழ்த்தப்படுகின்றன என பிரதமர் மோடி.

பிரதமர் மோடி, எந்த ஒரு நாட்டையும் தனது பேச்சில் குறிப்பிடவில்லை என்றாலும். அவர், சீனாவையே மறைமுகமாக சுட்டிக்காட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x