Published : 24 Aug 2014 07:20 PM
Last Updated : 24 Aug 2014 07:20 PM

மீனவர் பிரச்சினை: சுப்பிரமணியன் சுவாமி யோசனையை நிராகரித்தது இலங்கை அரசு

மீனவர் பிரச்சினையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்த யோசனையை, இலங்கை அரசு திட்டவட்டமாக நிராகரித்தது.

இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க 3 ஆண்டுகளுக்கான தற்காலிக மீன்பிடி அனுமதியை அளிக்கலாம் என்று இலங்கை அரசுக்கு சமீபத்தில் சுப்பிரமணியன் சுவாமி யோசனை தெரிவித்திருந்தார்.

இந்திய கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துவிட்டதால், இந்த யோசனையை இலங்கை அரசு ஏற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில், சுப்பிரமணியன் சுவாமி கூறியது போன்ற திட்டத்துக்கு சாத்தியமில்லை என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னா திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x