Published : 20 Aug 2014 10:00 AM
Last Updated : 20 Aug 2014 10:00 AM
எபோலா வைரஸ் தாக்குதலில் மூன்றே நாள்களில் 84 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
எபோலா வைரஸ் தாக்குதலால் இறந்தவர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான 3 நாள்களில் மட்டும் 84 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எபோலா வைரஸ் தாக்குதலால் உலக அளவில் இறந்தவர் எண்ணிக்கை 1,229 ஆக உயர்ந்துள்ளது. கிசிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது.- ஏஎப்பி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT