Published : 30 Oct 2018 10:12 AM
Last Updated : 30 Oct 2018 10:12 AM
உலகின் நான்காவது பெரிய ஜனநாயக நாடான பிரேசிலின் அதிபராகிறார், தீவிர வலதுசாரித் தலைவரான ஜேர் போல்ஸனாரோ. கம்யூனிஸத்தின் தீவிர எதிர்ப்பாளரான இவர், துப்பாக்கித் தடைச் சட்டங்களைத் தளர்த்துவது, போலீஸுக்குக் கட்டற்ற அதிகாரங்களை வழங்குவது என்பன போன்ற கருத்துகளைக் கொண்டவர். 2019 ஜனவரி 1-ல் அதிபராகப் பதவியேற்கத் தயாராகிவரும் இவர், ராணுவ அதிகாரியாகப் பணியாற்றியவர். சோஷியல் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட போல்ஸனாரோவுக்கு 55.1% வாக்குகள் கிடைத்திருக்கின்றன. பிரேசில் கதை இப்படியிருக்க அயர்லாந்தோ, இடதுசாரி அதிபர் மைக்கேல் டி ஹிக்கின்ஸைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.
முன்னதாக, 2011-ல் நடந்த தேர்தலில் வென்று முதன்முதலில் அதிபரானவர் தன்னுடைய முதல் பதவிக்காலம் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்தார். சில நாட்களுக்கு முன்பு நடந்த அதிபர் தேர்தலில் 56% வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராகியிருக்கிறார். இந்தத் தேர்தலின் இன்னொரு விசேஷம், இறை நிந்தனையைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும் சட்டத்தை நீக்குவது தொடர்பான கருத்தறியும் வாக்கெடுப்பும் வாக்குப்பதிவுடன் சேர்த்து நடத்தப்பட்டது. அந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று 64.85% வாக்களித்திருக்கிறார்கள். கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4% கருக்கலைப்பு தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென்று வாக்களித்த நிலையில், இந்தக் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT