Last Updated : 26 Oct, 2018 09:19 PM

 

Published : 26 Oct 2018 09:19 PM
Last Updated : 26 Oct 2018 09:19 PM

பிரதமராகப் பதவி ஏற்றார் ராஜபக்சே; விக்ரமசிங்கே அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றார் சிறிசேனா

இலங்கையில் அரசியலில் அதிரடி மாற்றங்கள் நடந்துள்ளது. அங்குப் பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதையடுத்து, இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இலங்கையில் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் இலங்கை மக்கள் சுதந்திரா கட்சியும், பிரதமர் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சியும் கூட்டணியாக அமைத்து ஆட்சியில் இருக்கிறது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார்.

இதனிடையே கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.

இந்நிலையில், சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது.

இது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணியின் பொதுச்செயலாளரும், வேளாண் அமைச்சருமான மகிந்திரா அமரவீரா கூறுகையில், பிரதமர் விக்ரமசிங்கேவுக்கு அளித்து வந்த ஆதரவை நாங்கள் வாபஸ் பெற்றுவிட்டோம் அதற்கான கடிதத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டோம் எனத் தெரிவித்தார்.

அதிபரி சிறீசேனாவும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவும் இப்போது இணைந்திருப்பதால், பலவேறுவிதமான அரசியலமைப்புச் சிக்கலுக்கு வழிகோலும், ஏனென்றால், 19-வது சட்டத்திருத்தத்தின்படி, பெரும்பான்மை இல்லாமல் பிரதமர் விக்ரமசிங்கேவை நீக்க அனுமதி கிடையாது என்று அரசியல்நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஏனென்றால் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணி இணைந்து 95 உறுப்பினர்கள் வைத்துள்ளனர், ஆனால், விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை.

இந்நிலையில், தன்னுடைய அரசுக்கு வாபஸ் பெறப்பட்டு, ராஜபக்சே புதிய பிரதமராகப் பதவி ஏற்றுள்ளது குறித்து விக்ரமசிங்கே எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

சமீபத்தில் அதிபர் சிறிசேனாவை கொல்ல சதித்திட்டம் போடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேவின் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிபர் சிறிசேனா குற்றம்சாட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x