Published : 27 Oct 2018 05:33 PM
Last Updated : 27 Oct 2018 05:33 PM
இலங்கை பிரதமராக தான் நீடிப்பதாக இலங்கை பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கே தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கே பேசும்போது, ”இலங்கையின் பிரதமராக உங்களை சந்திக்கிறேன். இலங்கையின் பிரதமராக நான் தான் நீடிக்கிறேன். பிரதமராகவே செயல்படுவேன்.
இலங்கையின் அரசியலைப்பின் சட்டப்படி சிறிசேனாவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர் தன்னை நாடாளுமன்றத்திலிருந்து மட்டுமே நீக்க முடியும். தான் பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார்.
கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்து உத்தரவிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது.
சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.
இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே வெள்ளிக்கிழமை பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT